இந்தக் கப்பல்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
டி.ஐஆர், சேகரி, வருணா மற்றும் சுதர்சினி ஆகிய கப்பல்களே திருகோணமலைக்கு வருகின்றன.
இதில், வருணா என்பது கரையோர பாதுகாப்பு கப்பலாகும். சுதர்சினி என்பது கடற்படை பயிற்சிக்கப்பலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் நங்கூரமிட்டிருக்கும் போது இந்தகப்பல்களில் பயணிக்கும் வீரர்கள், இலங்கை கடற்படையினருடன் பயிற்சிகள் மற்றும் கலாச்சார, விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபடவுள்ளனர்.
